பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆவண பத்திர எழுத்தர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் மூலம் பத்திரம் பதிவு செய்வதை ஏற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆவண பத்திர எழுத்தர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பூர்: ஆன்லைன் மூலம் பத்திரம் பதிவு செய்வதை ஏற்றுக் கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஆவண பத்திர எழுத்தர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, ஆன்-லைன் மூலம் பத்திரம் பதிவு செய்து கொள்வதை பதிவுத்துறை ஏற்றுக் கொண்டு பொதுமக்களுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும், ஆன்-லைன் மூலம் பதிவு கட்டணம் செலுத்தி பத்திரப்பதிவு செய்வது தடைபட்டால், பதிவு கட்டணத்தை திரும்பப் பெற வழிவகை செய்ய வேண்டும், மற்றும் உயில் சாசனம் போன்ற ஆவணங்களைப் பதிவு செய்ய ஆப்லைன் மூலம் பத்திரப் பதிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.



மேலும், பத்திர எழுத்தர்களை இடைத்தரகர் என்று கூற வேண்டாம் என்றும், மேற்கூறிய தீர்மானங்கள் நிறைவேற வேண்டும் என அவர்கள் கோஷங்களை எழுப்பினர். தங்களது கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளாவிடில் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவோம் எனவும் ஆவண பத்திர எழுத்தர் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட எழுத்தர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...