எஸ்டேட் பகுதிகளில் தொடர்ந்து உலா வரும் யானைகள்: ஊழியர்கள் பீதி

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் உலா வரும் காட்டு யானைகளால் தோட்ட ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர்.

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதிகளில் உலா வரும் காட்டு யானைகளால் தோட்ட ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர்.



வால்பாறையை அடுத்த பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக காட்டு யானைக்கூட்டங்கள் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து அட்டகாசம் செய்து வருகின்றன. குறிப்பாக, ரேசன் கடைகளை இடித்து சூறையாடுகிறது. அதுமட்டுமில்லாமல், நள்ளிரவு நேரங்களில் குடியிருப்புகளை உடைத்து சேதப்படுத்துகிறது. இதனால், தொழிலாளர்கள் நாளுக்கு நாள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில், அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். பகல் நேரங்களிலேயே தேயிலைத் தோட்டங்களில் யானைகள் சுற்றித் திரிகின்றன. இதனால், ஊழியர்கள் பீதி உடனேயே பணிபுரிய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.



வால்பாறையின் முக்கிய சுற்றுலாத்தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், சுற்றுலாப்பயணிகள் இப்பகுதிக்கு வர வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...