நியாய விலைக் கடையில் இனிமேல் மசூர் பருப்புகள் வழங்கப்படாது : அமைச்சர்

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் இனிமேல் மசூர் பருப்புகள் வழங்கப்படாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள நியாய விலைக்கடைகளில் இனிமேல் மசூர் பருப்புகள் வழங்கப்படாது என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

உணவு வழங்கல் மண்டல முதுநிலை மேலாளர் மற்றும் மாவட்ட அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் சென்னை எழிலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது :-  தமிழகத்தில் இதுவரை 99 சதவீதம் பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மார்ச் 1-ம் தேதி முதல் ஸ்மார்ட் கார்டு மூலம் ரேஷன் பொருள்கள் வாங்கும் முறை முழுவதுமாக அமலுக்கு வருகிறது. மார்ச் 1-ம் தேதி ஸ்மார்ட் கார்டு கட்டாயம். இருப்பினும், ஸ்மார்ட் கார்டு இல்லை என்பதற்காக ரேஷன் பொருள்கள் மறுக்கப்படாது. பயனாளர்களுக்குத் தேங்காய் எண்ணெய் வழங்குவதில் நடைமுறைச் சிக்கல் உள்ளது. மசூர் பருப்பு கொள்முதல் செய்யப்படவில்லை. எனவே, இந்த மாதம் முதல் நியாயவிலைக் கடைகளில் மசூர் பருப்பு வழங்கப்படாது.

ரேஷன் பொருள்களைக் கடத்துபவர்கள், உணவுப் பொருள்களை வழங்குவதில் மோசடி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் இந்த விவகாரங்கள் தொடர்பாக 1,037 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...