இனி வங்கி அதிகாரிகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம்

வங்கிகள் அதிகாரிகளை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயமாக இடமாற்றம் செய்ய வேண்டும் என ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

வங்கிகள் அதிகாரிகளை மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டாயமாக இடமாற்றம் செய்ய வேண்டும் என ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், மத்திய ஊழல் தடுப்பு ஆணையம் பொதுத்துறை வங்கிகளுக்கு சுற்றறிக்கையை அனுப்பி உள்ளது. அதில், 2017 டிசம்பர் 31-ம் தேதியுடன் ஒரு கிளையில் மூன்று ஆண்டுகளை நிறைவு செய்த அதிகாரிகளை இடமாற்றம் செய்ய உத்தரவிட்டு உள்ளது. இதுபோன்று 2017 டிசம்பர் 31-ம் தேதியுடன் ஒரு கிளையில் 5 ஆண்டுகளை நிறைவு செய்த ‘கிளர்க்’ பணியாளர்களை உடனடியாக பணியிடமாற்றம் செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. ஊழல் தடுப்பு ஆணையத்தின் உத்தரவின்படி, பாங்க் ஆப் பரோடா பணியை தொடங்கிவிட்டது என தகவல் வெளியாகி உள்ளது.

“மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தின் வழிக்காட்டுதலின்படி அனைத்து அதிகாரிகளும் ஒவ்வொரு மூன்று ஆண்டுகளுக்கும் இடமாற்றம் செய்யப்படுவார்கள். அதிகாரிகளுக்கான இடமாற்றம் விவகாரத்தில் வங்கியின் கொள்கையின்படி, 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே பதவியில் எந்தஒரு அதிகாரியும் இருக்க கூடாது, நகராட்சி வரம்புக்குள் உள்பட்ட கிளைகளில் 5 ஆண்டுகளாக இருக்க கூடாது,” என பாங்க் ஆப் பரோடா குறிப்பாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை ஒன்றில் 1.77 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான மோசடி நடந்து உள்ளது வெளியே தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக பல்வேறு விசாரணை முகமைகள் விசாரித்து வருகிறது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...