பேரிடர் கால மீட்பு பணிகள் குறித்த பயிற்சி முகாம் தொடக்கம்

பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்த அரசு அதிகாரிகளுக்கு 3 நாள் பயிற்சி முகாம் உதகையில் தொடங்கியது.

நீலகிரி : பேரிடர் காலங்களில் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்த அரசு அதிகாரிகளுக்கு 3 நாள் பயிற்சி முகாம் உதகையில் தொடங்கியது. 



மலை மாவட்டமான நீலகிரியில் மழை காலங்களில் நிலச்சரிவு மற்றும் மண்சரிவு ஏற்படுவது வழக்கமான ஒன்று. இந்நிலையில் விரைவில் பருவமழை துவங்க உள்ளது. இந்த மழையின் போது நிலச்சரிவு ஏற்படும் இடங்களைக் கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பணிகளானது மாவட்டத்தில் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.



இந்நிலையில், உதகையில் 3 நாட்கள் பேரிடர் மீட்பு பயிற்சி இன்று தொடங்கியது. இப்பயிற்சியானது காவல்துறை, தீயணைப்புத்துறை, வருவாய்த்துறை, வனத்துறை மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோருக்கு அளிக்கப்படுகிறது. இப்பயிற்சியில் பேரிடர் மேலாண்மையின் கூடுதல் இயக்குநர் ஜெனரல் ஆசி பெங்கார மற்றும் தலைமை கமாண்டர் ரேகா நம்பியார் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, பேரிடர் காலங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும், பொதுமக்களை நிலச்சரிவு மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து பயிற்சி பெறுபவர்களுக்கு எடுத்துரைத்தனர். பேரிடர் மேலாண்மை மீட்புக்காக 13 பட்டாளியன் தொடங்கப்பட்டு, இதற்காக ரூ. 13 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 3 நாள் பயிற்சியில் களப்பயிற்சியும் அளிக்கப்படவுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...