பள்ளி மாணவர்களுக்கு தபால் அலுவலகத்தில் சேமிப்பு கணக்கு தொடக்கம்

கோவை மாவட்டம் மதுக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, தபால் அலுவலகத்தில் இலவசமாக சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டது.

கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, தபால் அலுவலகத்தில் இலவசமாக சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டது.

பள்ளி மாணவர்களிடையே சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக, மதுக்கரை தபால் அலுவலகம் மற்றும் உள்ளூர் பா.ஜ.க., நிர்வாகம் இணைந்து மதுக்கரை அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சேமிப்பு கணக்கு தொடங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இலவச சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டது. இதன்மூலம், 9 மற்றும் 11-ம் வகுப்பு மாணவர்கள் பயனடைவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. 



இது தொடர்பாக மதுக்கரை கிளையின் தபால் அலுவலர் டி. அசோக்ராஜ் கூறுகையில், முன்னாள் பள்ளி மாணவர்களிடம் சேமிப்பு என்ற சிறந்த பழக்கம் இருந்து வந்தது. ஆனால், அவை தற்போதைய மாணவர்களிடம் மறந்து போகிவிட்டது. மாணவர்களுக்கு சேமிப்பு எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். என்றார். 

பள்ளி மாணவர்களுக்கு தொடங்கப்பட்ட 300 சேமிப்பு கணக்குகளிலும் ஆரம்பத் தொகையை அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர் உமர் செலுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...