மரங்களில் ஆணியடித்து மாட்டப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் அகற்றம்

கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மரங்களில் ஆணியடித்து விளம்பரம் செய்யப்பட்டிருந்த விளம்பர பதாகைகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அகற்றி நடவடிக்கை எடுத்தனர்.


கோவை: கோவையின் பல்வேறு பகுதிகளில் உள்ள மரங்களில் ஆணியடித்து விளம்பரம் செய்யப்பட்டிருந்த விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டது.



கோவை திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள மரங்களில் ஆணியடித்து விளம்பரப் பதாகைகள் வைத்து விளம்பரம் செய்யப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன. 



இதனைத் தொடர்ந்து, 'ஓசை தன்னார்வ அமைப்பினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது திருநெல்வேலியைச் சார்ந்த பேன்ட்செட் என்ற நிறுவனத்தினரே மரங்களில் விளம்பரங்கள் செய்திருப்பது தெரிய வந்தது. தொடர்ந்து, அந்த நிறுவனத்தினரே மரங்களில் பொருத்தப்பட்டிருக்கும் விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் என்று ஓசை அமைப்பினர் வலியுறுத்தினர். 

அதன் பேரில், அனைத்து மரங்களிலும் மாட்டப்பட்டிருந்த பல்வேறு நிறுவனங்களின் விளம்பரப் பதாகைகளையும் அந்த நிறுவனத்தினரே அகற்றினர். இதே போல் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரங்களில் ஒரு குறிப்பிட்ட கல்லூரி தொடர்பான விளம்பரம் சுமார் 500-க்கும் மேற்பட்ட மரங்களில் ஆணியடித்து மாட்டப்பட்டுள்ளது.

அவற்றையும் உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், இவ்வாறாக மரங்களில் ஆணி அடித்து விளம்பரம் செய்தால் ஒரு மரத்திற்கு ரூ.2000 வீதம் அபராதம் வசூலிக்கலாம் என்று நீதிமன்ற தீர்ப்பு உள்ளதாகவும் ஓசை அமைப்பைச் சேர்ந்த சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...