தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண்கள் இருவர் பலி

திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சத்தியமங்கலம் பகுதியில் இருந்து தாராபுரம் நோக்கி தனியாருக்குச் சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே வந்த போது ஒட்டன்சத்திரத்திலிருந்து திருப்பூர் நோக்கி வந்து  கொண்டிருந்த  தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.



இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் ஊதியூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



தனியார் பேருந்துகள் இரண்டும் அதி வேகமாக பயணித்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதனிடையே விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பேருந்து ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...