ஆந்திர மாநிலத்தில் 5 தமிழர்கள் சடலமாக மிதந்தது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை வேண்டும் - வைகோ

ஆந்திர மாநிலத்தில் 5 தமிழர்கள் சடலமாக மிதந்தது தொடர்பாக விளக்க அறிக்கையை தமிழக அரசு பெற வேண்டும் என்றும், மரணத்தில் சந்தேகம் இருந்தால் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்றும் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

கோவை: ஆந்திர மாநிலத்தில் 5 தமிழர்கள் சடலமாக மிதந்தது தொடர்பாக விளக்க அறிக்கையை  தமிழக அரசு பெற வேண்டும் என்றும், மரணத்தில் சந்தேகம் இருந்தால்  சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்றும் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் ராமசாமி ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ மற்றும் ஆகியோர் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தனர்.

அப்போது மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் ராமசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், " தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்பதால் எனக்கு இந்தியா வர இருந்த தடையை உடைத்தவர் வைகோ. எனவே, அவர் மலேசியா செல்ல உள்ள தடை உடைக்கப்படும். தமிழீழம் மலர வேண்டும் என்ற எனது கருத்தில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை" என்றார்.

இதையடுத்து ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், "ஆந்திர மாநில காவல் துறையினரால் கூலி வேலைக்குச் செல்லும் தமிழர்கள் கொல்லப்படுவது தொடர்ந்து வருகின்றது. ஆந்திர மாநில ஏரியில் 5 தமிழர்கள் சடலமாக மிதந்தது அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் அடித்து கொலை செய்யப்பட்டனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு ஆந்திர அரசிடம் விளக்க அறிக்கை பெற முயற்சிக்க வேண்டும். மேலும் இவர்களது மரணத்தில் சந்தேகம் இருந்தால் சி.பி.ஐ., விசாரணை கோர வேண்டும். ஈழ அகதிகளுக்கான சிறப்பு முகாம்களே இருக்கக் கூடாது என்பதே ம.தி.மு.க.,வின் நிலைப்பாடு" என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...