ஆந்திர மாநிலத்தில் 5 தமிழர்கள் சடலமாக மிதந்தது தொடர்பாக விளக்க அறிக்கையை தமிழக அரசு பெற வேண்டும் என்றும், மரணத்தில் சந்தேகம் இருந்தால் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்றும் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கோவை: ஆந்திர மாநிலத்தில் 5 தமிழர்கள் சடலமாக மிதந்தது தொடர்பாக விளக்க அறிக்கையை தமிழக அரசு பெற வேண்டும் என்றும், மரணத்தில் சந்தேகம் இருந்தால் சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்றும் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் ராமசாமி ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ மற்றும் ஆகியோர் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தனர்.
அப்போது மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் ராமசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், " தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்பதால் எனக்கு இந்தியா வர இருந்த தடையை உடைத்தவர் வைகோ. எனவே, அவர் மலேசியா செல்ல உள்ள தடை உடைக்கப்படும். தமிழீழம் மலர வேண்டும் என்ற எனது கருத்தில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை" என்றார்.
இதையடுத்து ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், "ஆந்திர மாநில காவல் துறையினரால் கூலி வேலைக்குச் செல்லும் தமிழர்கள் கொல்லப்படுவது தொடர்ந்து வருகின்றது. ஆந்திர மாநில ஏரியில் 5 தமிழர்கள் சடலமாக மிதந்தது அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் அடித்து கொலை செய்யப்பட்டனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு ஆந்திர அரசிடம் விளக்க அறிக்கை பெற முயற்சிக்க வேண்டும். மேலும் இவர்களது மரணத்தில் சந்தேகம் இருந்தால் சி.பி.ஐ., விசாரணை கோர வேண்டும். ஈழ அகதிகளுக்கான சிறப்பு முகாம்களே இருக்கக் கூடாது என்பதே ம.தி.மு.க.,வின் நிலைப்பாடு" என்றார்.
மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் ராமசாமி ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ மற்றும் ஆகியோர் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தனர்.
அப்போது மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் ராமசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், " தமிழீழ விடுதலைப் புலிகள் ஆதரவாளர் என்பதால் எனக்கு இந்தியா வர இருந்த தடையை உடைத்தவர் வைகோ. எனவே, அவர் மலேசியா செல்ல உள்ள தடை உடைக்கப்படும். தமிழீழம் மலர வேண்டும் என்ற எனது கருத்தில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை" என்றார்.
இதையடுத்து ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், "ஆந்திர மாநில காவல் துறையினரால் கூலி வேலைக்குச் செல்லும் தமிழர்கள் கொல்லப்படுவது தொடர்ந்து வருகின்றது. ஆந்திர மாநில ஏரியில் 5 தமிழர்கள் சடலமாக மிதந்தது அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் அடித்து கொலை செய்யப்பட்டனரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு ஆந்திர அரசிடம் விளக்க அறிக்கை பெற முயற்சிக்க வேண்டும். மேலும் இவர்களது மரணத்தில் சந்தேகம் இருந்தால் சி.பி.ஐ., விசாரணை கோர வேண்டும். ஈழ அகதிகளுக்கான சிறப்பு முகாம்களே இருக்கக் கூடாது என்பதே ம.தி.மு.க.,வின் நிலைப்பாடு" என்றார்.