ஆன்லைன் பத்திரப்பதிவை முறைப்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்

ஆன்லைன் பத்திரப்பதிவை முறைப்படுத்தக் கோரி மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேட்டுப்பாளையம்: ஆன்லைன் பத்திரப்பதிவை முறைப்படுத்தக் கோரி மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பத்திர பதிவுத்துறை சார்பில் ரூ.176 கோடியே 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த வலை அடிப்படையிலான "ஸ்டார் 2.0" திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதற்கான இணையதளத்தைச் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 11-ம் தேதி தொடங்கி வைத்தார்.

இந்த நிலையில், ஆன்லைன் பத்திரப்பதிவு நடைமுறையில் அதிக கால தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, ஆன்லைன் பத்திரப்பதிவு மூலம் ஏற்படும் தாமதத்தை கண்டித்தும், பத்திரப்பதிவு முறையை எளிமைப்படுத்தக் கோரியும்  மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூருகையில், "எளிய முறையில், பத்தே நிமிடங்களில் பத்திர பதிவு என பொதுமக்களிடம் விளம்பரப்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது பத்திரப்பதிவு செய்ய மூன்று நாட்களுக்கு மேல் ஆகின்றது. இதனால், பொதுமக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகிவருகின்றனர். எனவே, பத்திரபதிவுத்துறை அவசர கதியாக ஏற்படுத்திய ஆன்லைன் பதிவினை முறைப்படுத்திட வேண்டும்" என்றனர். 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட பத்திரம் மற்றும் நகல் எழுதுவோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி  கோசங்களை எழுப்பினர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...