உதகை மத்திய பேருந்து நிலையத்தை நவீனமயமாவது எப்போது? : பொதுமக்கள் கேள்வி

உதகை மத்திய பேருந்து நிலையத்தை நவீன பேருந்து நிலையமாக மாற்றுவதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அம்மாவட்ட மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

நீலகிரி: உதகை மத்திய பேருந்து நிலையத்தை நவீன பேருந்து நிலையமாக மாற்றுவதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அம்மாவட்ட மக்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர்.

சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சமவெளி பிரதேசங்களில் இருந்து வரும் நடுத்தர மக்கள் உதகைக்கு சுற்றுலா வருவதற்கு அரசு பேருந்துகளில் உபயோகித்து வருகின்றனர்.

மேலும் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மக்கள் சமவெளி பிரதேசங்களுக்குச் செல்ல அரசு பேருந்துகளையே நம்பியுள்ளனர். இதனால் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் நாள்தோறும் அதிகரித்தே காணப்படுகிறது.

இந்நிலையில் உதகை மத்திய பேருந்து நிலையம் போதிய பராமரிப்பு இல்லாததால் பேருந்து நிலையத்திற்குள் இருக்கும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் மழைக் காலங்களில் மழை நீர் சூழ்ந்தும், சேறும், சகதியுமாக இருப்பதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்த பேருந்து நிலையத்தை சீரமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்ற 121-வது மலர் கண்காட்சியை துவக்கி வைத்த தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, உதகை மத்திய பேரூந்து நிலையத்தை ரூ.2 கோடி மதிப்பில் நவீன பேருந்து நிலையமாக மாற்றப்படும் என வாக்குறுதியளித்தார்.

இந்த வாக்குறுதியை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும் என்று நீலகிரி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...