உதகையை அடுத்த மசினகுடி குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை பிடிக்க வனத்துறையினர் தாமதம் செய்து வரும் நிலையில் மீண்டும் இன்று அதிகாலை மீண்டும் கரடி பேரூந்து நிலையம், காவல் நிலையம் பகுதியில் உலா வருவதால் மக்கள் அச்சம்.
நீலகிரி: உதகையை அடுத்த மசினகுடி குடியிருப்பு பகுதியில் உலா வரும் கரடியை பிடிக்க வனத்துறையினர் தாமதம் செய்து வரும் நிலையில் மீண்டும் இன்று அதிகாலை மீண்டும் கரடி பேரூந்து நிலையம், காவல் நிலையம் பகுதியில் உலா வருவதால் மக்கள் அச்சம்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள மசினகுடி பஜார் பேரூந்து நிலையம் பகுதியில் ஆண் கரடி ஒன்று இரவு 7 மணிக்கு மேல் உலா வருகிறது. கடந்த 6 நாட்களுக்கு முன்பு மசினகுடி காவல் நிலையத்தில் புகுந்த கரடி, நேற்று முன் தினம் இரவு நெடுஞ்சாலை தங்கும் விடுதியில் புகுந்தது. அத்துடன் அங்குள்ள ஒரு வீட்டின் கூரையை பிரித்து உள்ளே நுழைய முயன்றது.
மேலும் ஒருவர் கடையில் பொருட்களை வாங்கி கொண்டு சென்ற போது அவரை துரத்தியுள்ளது. இந்த கரடி இன்று அதிகாலை மசினகுடி பேரூந்து நிலையம் வழியாக மீண்டும் காவல் நிலையம் பகுதிக்கு சென்றது. இந்த காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதனால் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ள நிலையில் வனத்துறையினர் இந்த கரடியை கூண்டு வைத்து பிடிக்க தாமதம் செய்து வருவதால் மக்களை இந்த கரடி தாக்கும் அபாயம் உள்ளது. ஒரு மாத காலமாக குடியிருப்பு, காவல் நிலையம், மாநில நெடுஞ்சாலை தங்கும் விடுதி ஆகிய பகுதிகளில் உலா வருவதால் இரவு 9 மணிக்கு மேல் யாரும் வராமல் பயப்படும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.