திருப்பூர் மாவட்ட மக்களை மகிழ்வித்த ஜல்லிக்கட்டு: வீரம் பொங்க விளையாடிய மண்ணின் மைந்தர்கள்

போட்டி தொடங்கியது முதலே காளைகள் சீறிப்பாய்ந்தன. ஆனால், சற்றும் சளைக்காத வீரர்கள் திமிரிய காளைகளை அடக்கினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு வீர விளையாட்டுப் போட்டியில் 535 காளைகள் பங்கேற்றன. 

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 



இதனைத் தொடர்ந்து, இதுவரை ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறாத மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்தவும், அதனைக் கண்டுகளிக்கவும் ஆர்வம் காட்டினர். 

அதன்படி, சமீபத்தில் கோவையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று திருப்பூர் மாவட்டம் அலகுமலை பகுதியில் ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டி நடைபெற்றது.



இதற்கான அறிவிப்பு வெளியானவுடனேயே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் 700-க்கும் மேற்பட்ட காளைகள் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதாக பதிவாகின. 

பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் இதற்காக பெயர்களை பதிவு செய்தனர்.

தொடர்ந்து, இன்று காலை கால்நடை பராமரிப்புத்துறை  அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

முரட்டுக் காளைகள் 

மாவட்டத்தில் முதன்முறையாக நடைபெறும் ஜல்லிக்கட்டு  போட்டியை காண திருப்பூர் மட்டுமல்லாது சுற்றுப்புற மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் அலகுமலையில் குவிந்தனர். 



போட்டி தொடங்கியது முதலே காளைகள் சீறிப்பாய்ந்தன. ஆனால், சற்றும் சளைக்காத வீரர்கள் திமிரிய காளைகளை அடக்கினர். 

அவ்வாறு காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்களில் 35 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இந்த வீர விளையாட்டுப் போட்டியில் விக்னேஷ் என்ற மாடுபிடி வீரர் 11 மாடுகளை அடக்கி முதல் பரிசை தட்டிச் சென்றார். அவருக்கு ஒரு இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டது. 

தொடர்ந்து, ராஜசேகர் என்ற வீரர் 9 மாடுகளை அடக்கி இரண்டாம் பரிசைப் பெற்றார்.



சிறப்பான முறையில் ஜல்லிகட்டு விளையாட்டுப் போட்டி நடைபெற்றுள்ளது என்று மகிழ்ச்சி தெரிவித்த  திருப்பூர் மாவட்ட மக்கள்,  இந்த விளையாடுப் போட்டி ஆண்டுதோறும்  நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...