கோவையில் வெண்புள்ளிக்கான மருந்து வெளியீடு

மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த வெண்புள்ளிக்கான மருந்து இன்று கோவை இந்திய தொழில் வர்த்தக சபையில் வெளியிடப்பட்டது.

கோவை : மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்த வெண்புள்ளிக்கான மருந்து இன்று கோவை இந்திய தொழில் வர்த்தக சபையில் வெளியிடப்பட்டது. 



வெண்புள்ளிகள் என்பவை தோலின் மேற்பரப்பில் திட்டுத் திட்டாகவோ அல்லது புள்ளி வடிவிலோ காணப்படுபவை. தமிழகத்தில் மட்டும் சுமார் 37 லட்சம் பேர், இந்திய அளவில் சுமார் 6 கொடி பெரும் வெண்புள்ளிகளை கொண்டவர்களாக இருக்கின்றனர். பரவாத தன்மையுடைய இந்த வெண்புள்ளிகள் சமுதாயத்தில் எதிர்மறையான விளைவுகளை உருவாக்கி வருகிறது.



இந்த நிலையில், வெண்புள்ளி உள்ளவர்களுக்கான கருத்தரங்கம் மற்றும் அதற்கான மருந்து வெளியிடும் நிகழ்ச்சி இன்று கோவை இந்திய தொழில் வர்த்தக சபையில் நடைபெற்றது. இதில் வெண்புள்ளி விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் டாக்டர்.உமாபதி கலந்து கொண்டு பேசுகையில், "வெண்புள்ளி என்பது நோய் அல்ல. இது குணப்படுத்தக்கூடியது. இதற்கான மருந்தை மத்திய அரசின் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தயாரித்துள்ளது. 



இந்த மருந்தை தொடர்ந்து 400 நாட்கள் உண்டுவர வெண்புள்ளிகள் மறைந்து இயல்பான தோலின் நிறத்தை அடையலாம். உலகப் பிரபலம் பெற்ற மைக்கில் ஜாக்ஸனுக்கும் வெண்புள்ளிகள் இருந்தன. இந்தியாவில் பலருக்கு இந்த வெண்புள்ளி உள்ளது. ஆனாலும் அவர்கள் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்." என்றார். 

தொடர்ந்து, வெண்புள்ளிக்கான மருந்தை கிருஷ்ணா ஸ்வீட்ஸ்-ன் தலைவர் கிருஷ்ணன் வெளியிட்டார். இதனை 100-க்கும் மேற்பட்டவர்கள் வாங்கிச்சென்றனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...