தற்காப்புக்காக புலியை தாக்கிக் கொன்ற முதியவர்

கிருஷ்ணகிரி அருகே தன்னை தாக்க வந்த சிறுத்தை புலியை முதியவர் ஒருவர் கத்தியால் தாக்கிக் கொன்றார்.


கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே தன்னை தாக்க வந்த சிறுத்தை புலியை முதியவர் ஒருவர் கத்தியால் தாக்கிக் கொன்றார்.



கிருஷ்ணகிரி மாவட்டம் மஹாராஜாகடை அடுத்த மேலுகொல்லை பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி (62). வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலத்தில் கால் நடைகள் வைத்து பராமரித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று காலை விவசாய நிலத்தில் பசு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அங்கு வந்த சிறுத்தை புலி ராமமூர்த்தியை தாக்க முற்பட்டது. இதனை அடுத்து சிறுத்தை புலியிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள மாடுகளுக்கு இலை கொடிகள் வெட்டுவதற்கு வைத்து இருந்த கத்தியால் அதனைத் தாக்கினார். இதில் சிறுத்தை புலியின் கால், கழுத்து, முதுகு போன்ற இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டு சிறுத்தை புலி பலியானது. 



இதில் ராமமூர்த்தியும் காயமடைந்தார். தற்போது அவர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

முதியவர் தாக்கியதில் சிறுத்தைப் புலி பலியானதை அடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓசூர் வனகோட்ட கால்நடை மருத்துவர் பிரகாஷ் சிறுத்தைப் புலியை மருத்துவ பரிசோதனை செய்து வருகிறார். மேலும் வனத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...