கோவையில் ரஜினி மக்கள் மன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கை தீவிரம்

ரஜினி மக்கள் மன்றத்திற்கான உறுப்பினர் சேர்க்கை கோவையில் இன்று நடைபெற்றது.

கோவை : ரஜினி மக்கள் மன்றத்திற்கான உறுப்பினர் சேர்க்கை கோவையில் இன்று நடைபெற்றது. 



கோவையைச் சேர்ந்த கோப்ரா பிரதீப் குமார் என்பவர் தலைமையில் ரஜினி ரசிகர் மன்ற உறுப்பினர் சேர்க்கை முகாம் ஓசூர் சாலையில் உள்ள ஆர்தரா அரங்கில் இன்று நடைபெற்றது. இது குறித்து பிரதீப்குமார் கூறுகையில், " ரஜினி ரசிகன் என்ற அடிப்படையில் இந்த முகாமை தானாக முன்வந்து நடத்தி வருகிறேன். 

கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ரஜினி மன்றத்திற்கு உறுப்பினர் சேர்க்கும் பணியை செய்து வரும் சேம் ஆண்ட்ரூஸ் என்பவரும் இந்த முகாமில் கலந்து கொண்டுள்ளார். இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமில் கலந்து கொள்பவர்களின் பெயர், வயது, ஊரின் விபரம், மன்றத்தில் இணைவதற்கான காரணம், ஏற்கனவே வேறெதுவும் கட்சியில் உள்ள விபரம் என பல்வேறு தகவல்கள் கேட்டுள்ள உறுப்பினர் படிவம் இலவசமாக வழங்கப்படுகிறது. 

மேலும், உறுப்பினர் சேர்க்கை மூலம் இணைந்துள்ள படிவங்கள் ரஜினியிடம் கொண்டு செல்லப்படும். இணையத்தளம் மூலமாகவும் ரஜினி மக்கள் மன்றத்திற்கு உறுப்பினராகலாம்." என்றார்.  

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...