"காவிரி நீரை இன்றே திறந்துவிட்டாலும் 5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் காய்ந்துவிடும்"

உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படி காவிரி நீரை இன்றே திறந்துவிட்டாலும் 5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் காய்ந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி : உச்சநீதிமன்றம் தீர்ப்பின் படி காவிரி நீரை இன்றே திறந்துவிட்டாலும் 5 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் காய்ந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் தெரிவித்துள்ளார். 

நீலகிரி மாவட்டம் உதகையில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர்  நல்லசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா, எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள் கொண்டாடியது மட்டுமே எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு ஓராண்டில் செய்த சாதனை. இதற்காக குறைந்தது 60 நாட்கள் வீணடித்ததை தான் ஓராண்டு சாதனை என்று கருதுகிறார்கள். அரசுப் பணிகளை கவனிக்காமல் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்ததிட வேண்டுமா? என்பது மக்களின் கேள்வியாக உள்ளது.

உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் படி காவிரி நீரில் 14.75 டி.எம்.சி நீரை இழந்துள்ளோம். தமிழகத்தில் விவசாயிகள் பயன்படுத்தி வந்த 10 டி.எம்.சி நீரை தற்போது கர்நாடகா தொழிற்சாலைகளுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலையின் கழிவு நீர் காவிரி நீரில் கலக்கப்படு அபாயம் ஏற்பட்டுள்ளது. உரிமை நீரை இழந்து கழிவு நீரை பெறும் தீர்ப்பாகவே இந்த தீர்ப்பினைக் கருதுகிறோம்.

காவிரி பிரச்சனையில் காங்கிரஸ் மற்றும் பி.ஜே.பி. அரசுகள் பிரித்து ஆளுகின்ற சூழ்ச்சியை கையாண்டு வருகின்றன. தமிழ்நாட்டையும், கர்நாடகத்தையும் மோத விட்டு காவிரி பிரச்சனையில் வேடிக்கை பார்த்து வருகின்றனர். இந்தத் தீர்ப்பே அதற்கு சாட்சியாகும். கர்நாடகாவில் தற்போது தேர்தல் வர உள்ளது. இதனை எதிர்பார்த்தும் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் படி காவிரியில் தண்ணீர் திறந்து விட்டாலும் 5 இலட்சம் ஏக்கர் நெல் பயிர்கள் கருகி விடும். இதனால் தமிழ்நாட்டு விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்திக்க இருக்கின்றனர். இதன் விளைவு தற்கொலைக்கு தூண்டும்." என்று அவர் பேசினார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...