சாலை விபத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த இளைஞர் பலி

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த சாலை விபத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த இளைஞர் பலியானார்.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடந்த சாலை விபத்தில் போலீஸ் நண்பர்கள் குழுவை சேர்ந்த இளைஞர் பலியானார்.

பல்லடம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சந்திரன். இவரும் போலீஸ் நண்பர்கள் குழுவை சார்ந்த ஜெகதீஸ் என்கிற இளைஞரும் இருசக்கர வாகனத்தில் இரவு ரோந்து பணிக்காக சென்றுள்ளனர். திருச்சி சாலையில் சென்று கொண்டிருந்த போது பொதுப்பணித்துறை குடியிருப்பு அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துள்ளானதாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ஜெகதீஸ் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். மேலும் உடன் சென்ற சிறப்பு உதவி ஆய்வாளரும் படுகாயம் அடைந்தனர்.

அப்போது, அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இச்சம்பவம் குறித்து பல்லடம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலை அடுத்து விரைந்து சென்ற காவல்துறையினர் இருவரையும் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பலத்த காயம் அடைந்த ஜெகதீசை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் படுகாயம் அடைந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சந்திரனுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் கோவை தனியார் மருத்துவ மனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

பின்னர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீசார் விபத்தை ஏற்படுத்திய வாகனம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...