நடிகர் கமலஹாசனின் சுற்றுப்பயண விபரம் வெளியீடு

பிப்.,21ல் நடிகர் கமலஹாசன் மேற்கொள்ள இருக்கும் அரசியல் பயண விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒரே நாளில் 4 பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளுமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிப்.,21ல் நடிகர் கமலஹாசன் மேற்கொள்ள இருக்கும் அரசியல் பயண விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஒரே நாளில் 4 பொதுக்கூட்டங்களில் அவர் கலந்து கொள்ளுமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்துள்ள கமல் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். வரும் 21-ல் ராமநாதபுரத்தில் உள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம், இல்லத்திலிருந்து தனது அரசியல் பயணத்தை துவக்க உள்ளார். இதற்கு ”நாளை நமதே” எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அன்றைய தினமே மதுரையில் முதல் பொதுக்கூட்டம் நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கமலின் சுற்றுப்பயண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 

அதன்படி, 21-ம் தேதி காலை 07.45 மணிக்கு அப்துல்கலாம் இல்லத்திற்கு வருகிறார். காலை 8.15 மணிக்கு அப்துல்கலாம் படித்த பள்ளிக்கும் செல்லும் அவர், காலை 8.50 மணியளவில் கணேஷ் மஹால் பகுதியில் மீனவர்களைச் சந்திக்க உள்ளார்.

காலை 11.10 மணியளவில் அப்துல்கலாம் நினைவிடத்திற்கு செல்லும் நடிகர் கமல், அங்கிருந்து 11.20 மணிக்கு மதுரை கிளம்புகிறார். நண்பகல் 12.30 மணியளவில் ராமநாதபுரம் அரண்மனை நுழைவாயிலில் பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. பிற்பகல் 02.30 மணியளவில் பரமக்குடி ஐந்து முனை சாலையில் லேனா மஹாலுக்குச் சற்று முன் அமைந்த இடத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது. பிற்பகல் 03 மணிக்கு மானாமதுரை ஸ்ரீபிரியா தியேட்டருக்கு அருகே பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாலை 05 மணிக்கு மதுரை வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு எதிரே உள்ள ஒத்தக்கடை மைதானத்திற்கு வரும் நடிகர் கமல், 6 மணிக்கு கட்சி கொடி ஏற்றுகிறார். மாலை 06.30 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இரவு 8.10 முதல் 9 மணி வரை உரையாற்ற உள்ளார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...