ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் குறித்து சீமா உறுப்பினர்கள் ஆலோசனை

ஸ்டார்ட அப் இந்தியா திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான வரைவு கொள்கைகள் வகுப்பது குறித்து தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் (சீமா) ஆலோசனை நடத்தினர்.

கோவை: ஸ்டார்ட அப் இந்தியா திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான வரைவு கொள்கைகள் வகுப்பது குறித்து தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் (சீமா) ஆலோசனை நடத்தினர்.

பாரத பிரதமர் மோடி அறிவித்த ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் முக்கிய நோக்கம், தொழில் தொடங்க தடையாக உள்ள பல்வேறு சட்ட திட்டங்களை எளிமைப்படுத்துவது மற்றும் தொழில் தொடங்க ஆதரவான சூழல் உருவாக்குதல், நிதியுதவி மற்றும் ஊக்கத்தொகை வழங்குதல், கல்வி நிலையங்கள், தொழில்நிறுவனங்களோடு கூடிய ஒத்துழைப்பிற்கு மற்றும் தொழில்காப்பதிற்கு ஊக்கமளித்தல் போன்றவையாகும்.

பல்வேறு மாநிலங்களின் வேறுபட்ட தொழில் கொள்கைகளின் காரணமாக, பல தொழில்நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணைந்து நாடு முழுவதும் 75 தொழில் காப்பகங்களை  என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எஸ்.சி.  உடன் இணைந்து அமைக்க முடிவெடுத்துள்ளது. 

இந்த நிலையில், இந்த ஸ்டார்ட் அப் திட்டத்தினை தமிழகத்தில் செயல்படுத்த வரைவு கொள்கைகள் வகுப்பது குறித்து சீமாவில் கூடுதல் இயக்குநர் சஜீனா தலைமையில் நேற்று கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது, ஸ்டார்ட் அப் திட்டத்தின் மூலம் தொழில் நிறுவனங்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் சீமா வழங்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், அனைத்து கருத்துக்களையும் ஒன்றிணைத்து, ஒரு வரைவு திட்டத்தினை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அனுப்பி, அதற்கான ஒப்புதல் பெற்றபின் அரசிற்கு சமர்ப்பிக்க முடிவு எடுக்கப்பட்டது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...