தமிழகத்தின் பலவீனத்தை காவிரி தீர்ப்பு வெளிக்காட்டுவதாகவும், இதற்கு சரியான தலைமையும், ஆளுமையும் இல்லாததே காரணம் என திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் தெரிவித்துள்ளார்.
கோவை: தமிழகத்தின் பலவீனத்தை காவிரி தீர்ப்பு வெளிக்காட்டுவதாகவும், இதற்கு சரியான தலைமையும், ஆளுமையும் இல்லாததே காரணம் என திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் தெரிவித்துள்ளார்.
கோவையில் திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- தனது அடுத்த படமான ஜிப்ஜி, எல்லாப் பாடங்களை போல மக்களுக்கான சமூகம் சார்ந்த அரசியல் படமாக இருக்கும். தமிழக சூழலில் சாதி அபாயமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சாதி ஆணவ கொலைகளுக்கு பின்னால் அரசியல் இருக்கிறது. டிஜிட்டல் இந்தியாவில் சாதியம், மதவாதம் தீவிரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. சாதி, மதவாதத்தில் இருந்து பெரியார் மற்றும் அம்பேத்கரின் கருத்துகள்தான் மக்களைக் காப்பாற்றி கொண்டிருக்கிறது. இதனை உடைப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழக அரசு நிர்வாகம் பலவீனப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் மக்கள் ஜோக்கர்கள் ஆக்கப்படுகின்றனர். தமிழகத்தின் நிலை எவ்வளவு பலவீனப்பட்டுள்ளது என்பதை காவிரி தீர்ப்பு காட்டுகிறது. இதற்கு சரியான தலைமையும், ஆளுமையும் இல்லாததே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.