காவிரி தீர்ப்பின் மூலம் தமிழகத்தின் பலவீனம் வெளிப்படுகிறது: இயக்குநர் ராஜு முருகன்

தமிழகத்தின் பலவீனத்தை காவிரி தீர்ப்பு வெளிக்காட்டுவதாகவும், இதற்கு சரியான தலைமையும், ஆளுமையும் இல்லாததே காரணம் என திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழகத்தின் பலவீனத்தை காவிரி தீர்ப்பு வெளிக்காட்டுவதாகவும், இதற்கு சரியான தலைமையும், ஆளுமையும் இல்லாததே காரணம் என திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் தெரிவித்துள்ளார்.

கோவையில் திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- தனது அடுத்த படமான ஜிப்ஜி, எல்லாப் பாடங்களை போல மக்களுக்கான சமூகம் சார்ந்த அரசியல் படமாக இருக்கும். தமிழக சூழலில் சாதி அபாயமாக மாறிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சாதி ஆணவ கொலைகளுக்கு பின்னால் அரசியல் இருக்கிறது. டிஜிட்டல் இந்தியாவில் சாதியம், மதவாதம் தீவிரமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. சாதி, மதவாதத்தில் இருந்து பெரியார் மற்றும் அம்பேத்கரின் கருத்துகள்தான் மக்களைக் காப்பாற்றி கொண்டிருக்கிறது. இதனை உடைப்பதற்கான முயற்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தமிழக அரசு நிர்வாகம் பலவீனப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்து கொண்டிருக்கிறது. இன்றைய நிலையில் மக்கள் ஜோக்கர்கள் ஆக்கப்படுகின்றனர். தமிழகத்தின் நிலை எவ்வளவு பலவீனப்பட்டுள்ளது என்பதை காவிரி தீர்ப்பு காட்டுகிறது. இதற்கு சரியான தலைமையும், ஆளுமையும் இல்லாததே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...