முத்தாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமி

நீலகிரி மாவட்டத்தில் உள்ள முத்தாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முத்தாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். 

குன்னூர் முத்தாளம்மன் திருக்கோயிலில் நடைபெறும் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக விமானம் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை வந்தார். இங்கிருந்து, சாலை மார்க்கமாக அவர் நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு சென்றார். அங்கு, அவரை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், முத்தாளம்மன் ஆலயத்திற்குச் சென்ற முதலமைச்சர் பழனிசாமி, கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தார். 



இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, , இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ். ராமச்சந்திரன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா ஆகியோர் கலந்து கொண்டனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...