உதகை - குன்னூர் சாலையில் எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்புச்சுவர்கள் அமைக்கக் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் உதகை - குன்னூர் சாலையில் தொடரும் விபத்துகளை தடுக்கும் வகையில், எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை - குன்னூர் சாலையில் தொடரும் விபத்துகளை தடுக்கும் வகையில், எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான சாலைகள் மலைப்பகுதிகள் மற்றும் சரிவு பகுதிகளில் அமைந்துள்ளது. இதேபோல, உதகை - குன்னூர் சாலை கேத்தி பள்ளத்தாக்கை ஒட்டிய சரிவு பகுதிகளில் அமைந்துள்ளது. உதகை நகருக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையாக இது அமைந்திருப்பதால், நாள்தோறும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் முறையான தடுப்பு சுவர்கள் மற்றும் பள்ளத்தாக்கு குறித்த எச்சரிக்கை பதாகைகள் எதுவும் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதிகளில் நாளுக்கு நாள் விபத்து எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு விபத்துகளை தடுக்கும் வகையில், எச்சரிக்கை பதாகைகள் மற்றும் சாலை ஓரங்களில் முறையான தடுப்பு சுவர்கள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...