நீலகிரி மாவட்டம் உதகை - குன்னூர் சாலையில் தொடரும் விபத்துகளை தடுக்கும் வகையில், எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை - குன்னூர் சாலையில் தொடரும் விபத்துகளை தடுக்கும் வகையில், எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான சாலைகள் மலைப்பகுதிகள் மற்றும் சரிவு பகுதிகளில் அமைந்துள்ளது. இதேபோல, உதகை - குன்னூர் சாலை கேத்தி பள்ளத்தாக்கை ஒட்டிய சரிவு பகுதிகளில் அமைந்துள்ளது. உதகை நகருக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையாக இது அமைந்திருப்பதால், நாள்தோறும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் முறையான தடுப்பு சுவர்கள் மற்றும் பள்ளத்தாக்கு குறித்த எச்சரிக்கை பதாகைகள் எதுவும் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதிகளில் நாளுக்கு நாள் விபத்து எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு விபத்துகளை தடுக்கும் வகையில், எச்சரிக்கை பதாகைகள் மற்றும் சாலை ஓரங்களில் முறையான தடுப்பு சுவர்கள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான சாலைகள் மலைப்பகுதிகள் மற்றும் சரிவு பகுதிகளில் அமைந்துள்ளது. இதேபோல, உதகை - குன்னூர் சாலை கேத்தி பள்ளத்தாக்கை ஒட்டிய சரிவு பகுதிகளில் அமைந்துள்ளது. உதகை நகருக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையாக இது அமைந்திருப்பதால், நாள்தோறும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் முறையான தடுப்பு சுவர்கள் மற்றும் பள்ளத்தாக்கு குறித்த எச்சரிக்கை பதாகைகள் எதுவும் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதிகளில் நாளுக்கு நாள் விபத்து எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு விபத்துகளை தடுக்கும் வகையில், எச்சரிக்கை பதாகைகள் மற்றும் சாலை ஓரங்களில் முறையான தடுப்பு சுவர்கள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.