எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் ஸ்டிரைக் வாபஸ் - 5 நாட்களாக நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது

மாநில அளவிலான டெண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் நடத்தி வந்த 5 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

மாநில அளவிலான டெண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் நடத்தி வந்த 5 நாட்கள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

மண்டல அளவிலான வாடகை டெண்டர் முறை மாற்றப்பட்டு புதிதாக மாநில அளவிலான டெண்டர் முறை அமல்படுத்தப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென்மண்டல எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் கடந்த 12-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.

தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆகிய 6 மாநிலங்களில் சுமார் 4,500 எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் இயக்கப்படாததால், சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து பாட்டிலிங் மையங்களுக்கு எரிவாயு கொண்டு செல்லும் பணி பாதிக்கப்பட்டது. சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் பணியும் பாதிக்கப்பட்டது. கடந்த 14-ந் தேதி மும்பையில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது. தென்மண்டலத்தில் சுமார் 13 ஆயிரம் டன் எரிவாயு எடுத்துச் செல்லும் பணியும், 14 லட்சம் சிலிண்டர்களில் எரிவாயு நிரப்பும் பணியும் முடங்கியது.

6-வது நாளாக போராட்டம் நீடித்ததால் தமிழகம் உள்பட 6 மாநிலங்களிலும் பெரும்பாலான பகுதிகளில் ஓரிரு நாளில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவானது. எனவே, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, லாரி உரிமையாளர்களின் சில கோரிக்கைகளை ஏற்க எண்ணெய் நிறுவனங்கள் சம்மதம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், நாமக்கல்லில் இன்று தென்மண்டல எல்.பி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கூடி ஆலேசானை நடத்தினர். இந்த ஆலோசனையின்போது, டெண்டர் தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் உறுதி அளித்திருப்பதால் வேலைநிறுத்தப் போராட்டத்தை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. அதேசமயம், லாரி உரிமையாளர்களின் முக்கிய கோரிக்கை பற்றி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதன்மூலம், கடந்த 5 நாட்களாக நடந்த வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...