ஜெ., பிறந்த நாளையொட்டி அன்னதானம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அன்னதான நிகழ்ச்சியை, உணவுகளைப் பரிமாறி முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

மேட்டுபாளையம்: ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அன்னதான நிகழ்ச்சியை, உணவுகளைப் பரிமாறி முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள முத்தலாம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர், குன்னூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பின்னர், அவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு வருகை புரிந்தார். கோவை அ.தி.மு.க., அம்மா பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 10,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு குழுமியிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களுக்கு உணவுகளைப் பரிமாறி அன்னதானத்தை தொடங்கிவைத்தார்.

அவருடன் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கோவை, நீலகிரி மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கலந்துகொண்டனர். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வளாகத்தில் நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்ற காரணத்தால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சியை முடித்து விட்டு முதலமைச்சர் பழனிச்சாமி தனது சொந்த ஊரான எடப்பாடிக்கு புறப்பட்டுச் சென்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...