காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கோவையில் உள்ள மத்திய நீர் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை: காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் கோவையில் உள்ள மத்திய நீர் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில், ஏற்கனவே நடுவர் மன்றத்தால் ஒதுக்கப்பட்ட 192 டி.எம்.சி. நீரை விட 14.75 டி.எம்.சி. நீர் குறைத்து வழங்கப்பட்டிருப்பது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றம்சாட்டி, கோவை காந்தி மாநகர் பகுதியில் உள்ள மத்திய நீர் ஆணைய அலுவலகத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பேது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் தமிழக விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனவும், இதனைக் கண்டிக்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து முற்றுகையிட முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்சநீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. இதில், ஏற்கனவே நடுவர் மன்றத்தால் ஒதுக்கப்பட்ட 192 டி.எம்.சி. நீரை விட 14.75 டி.எம்.சி. நீர் குறைத்து வழங்கப்பட்டிருப்பது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குற்றம்சாட்டி, கோவை காந்தி மாநகர் பகுதியில் உள்ள மத்திய நீர் ஆணைய அலுவலகத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பேது, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் தமிழக விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் எனவும், இதனைக் கண்டிக்கும் வகையில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். இதனையடுத்து முற்றுகையிட முயன்றவர்களை போலீஸார் கைது செய்தனர்.