சின்னத்திரை நடிகர் சபரிமலையில் மாரடைப்பால் மரணம்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட நடிகர் கோவை தேசிங்கு சபரிமலையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக நட்சத்திரங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த பிரபல திரைப்பட நடிகர் கோவை தேசிங்கு சபரிமலையில் மாரடைப்பால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக நட்சத்திரங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

பல்லடம் பனப்பாளையத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (50). இவருக்கு கவிதா (42) என்ற மனைவியும், லாவண்யா (23), ப்ரியா (21) ஆகிய இரு மகள்களும் உள்ளனர். ஓட்டுநராக ஆரம்பக் காலத்தில் வேலை செய்து வந்த சுப்பிரமணி வாட்டசாட்டமாக இருந்ததால் பல்வேறு மேடைநாடகங்களில் நடிக்கத் துவங்கினார். இவரது நடிப்பைக் கண்டு திரைப்படங்களில் நடிக்கவும் அழைப்புகள் வந்தன. அதனைத் தொடர்ந்து, சுப்பிரமணிக்கு கோவைதேசிங்கு என்ற பட்டப்பெயரும் கிடைத்தது. மனம்கொத்திப்பறவை உள்ளிட்ட திரைப்படங்களிலும், சந்தனக்காடு, வாணி-ராணி, வைரநெஞ்சம் உள்ளிட்ட பல்வேறு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை சபரிமலைக்கு மாலையணிந்து யாத்திரையாகச் சென்ற அவர், சரங்கொத்தி என்ற பகுதியில், மாரடைப்பால் திடீரென மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பல்லடத்திலுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, சபரிமலையிலிருந்து நடிகர் சுப்பிரமணியின் உடல் பல்லடம் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இதில், தொழிலதிபர்கள், அனைத்துக்கட்சிப் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 

நடிகர் கோவைதேசிங்கு இறந்த சம்பவம் குறித்து அவரது நண்பர்கள் கூறுகையில், பழக மிகவும் எளிமையானவர் என்றும், அவரது இறப்பு தங்களுக்கு வேதனையளிப்பதாகவும் தெரிவித்தனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...