காதலை ஏற்க மறுத்த மாணவிக்கு தீ வைத்த இளைஞர் கைது

மதுரை அருகே காதலிக்க மறுத்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர் பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.

மதுரை அருகே காதலிக்க மறுத்த 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த இளைஞர் பாலமுருகனை போலீசார் கைது செய்தனர்.

திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டைச் சேர்ந்த பாலமுருகன் (23), அச்சம்பட்டி பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவியை ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். தன்னை காதலிக்கும்படி அந்த மாணவியை பாலமுருகன் வற்புறுத்தி உள்ளார். இது தொடர்பாக அந்த மாணவி, தனது பெற்றோரிடமும் கூறியுள்ளார். 

இந்த நிலையில், மாணவியின் தந்தை அளித்த புகாரின் பேரில் பாலமுருகன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இருந்த பாலமுருகன், காதலர் தினத்தன்று பள்ளிக்குச் சென்ற மாணவியை வழிமறித்துக் காதலிக்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளார். இதற்கு அந்த மாணவி மறுத்ததால், அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு பாலமுருகன் தலைமறைவாகி உள்ளார். படுகாயம் அடைந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அச்சம்பட்டி அருகே காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்த பாலமுருகனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...