கேரளாவில் பேருந்து கட்டணத்தை உயர்த்தக்கோரி ஸ்டிரைக்

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடைபெற்ற நிலையில், கேரளாவில் பேருந்து கட்டணத்தை உயர்த்தக் கோரி இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து போராட்டம் நடைபெற்ற நிலையில், கேரளாவில் பேருந்து கட்டணத்தை உயர்த்தக் கோரி இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கேரளாவில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படுவதாக கடந்த 14-ம் தேதி அம்மாநில அரசு அறிவித்த நிலையில், புதிய கட்டண உயர்வு மார்ச் 1 முதல் அமலுக்கு வரும் என்றும், புதிய கட்டண உயர்வின்படி சாதாரண பேருந்துகளில் ரூ.8-ம், விரைவு பேருந்துகளில் ரூ.11-ம் உயர்த்தப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது.

ஆனால், பேருந்து கட்டண உயர்வை ரூ.8-க்கு பதிலாக ரூ.10ஆக உயர்த்த வேண்டும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் கேட்டிருந்தனர். இது தொடர்பாக 15-ம் தேதியன்று தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின் போது, மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகை கட்டணத்தையும் ஏற்க தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் மறுத்து விட்டதால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால், தற்போது உயர்த்தப்பட்டுள்ள பேருந்து கட்டண உயர்வு போதுமானதாக இல்லை எனக்கோரி கேரளா முழுவதும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் இன்று (பிப்.,17) முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தைத் துவக்கி உள்ளனர். இதனால், கேரளாவில் பேருந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...