காதலிக்க மறுத்த மாணவியை எரித்துக் கொல்ல முயற்சி

மதுரையில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது


மதுரை : மதுரையில் காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொல்ல முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த நடுவக்கோட்டை பகுதியை சேர்ந்தவர்  மணிப்பாண்டி. இவரது மனைவி பேச்சியம்மாள். 

இந்த தம்பதியினருக்கு சித்ராதேவி (14) என்ற மகள் உள்ளார். இவர் திரளியை அடுத்த அச்சம்பட்டி பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்துவருகிறார்.

இந்த நிலையில், நடுவக்கோட்டை பகுதியை சேர்ந்த சந்தானம் என்பவரது மகன் பாலமுருகன் (23) என்பவர் சித்ராதேவி-யை ஒரு தலைபட்சமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. 

இவர் கடந்த 14-ம் தேதி காதலர் தினத்தன்று பள்ளி மாணவியிடம் தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு சித்ராதேவி மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.இதனால் பாலமுருகன் ஆத்திரமடைந்தார். 

தொடர்ந்து, இன்று மாலை பள்ளி முடிந்து மாணவி பேருந்துக்காக காத்திருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த பாலமுருகன் தன்னிடம் இருந்த 2 லிட்டர் பெட்ரோலை மாணவியின் உடல் மீது ஊற்றி தீப்பற்ற வைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். 

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அவரை மீட்டு திருமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

தொடர்ந்து, அவர் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக, வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பியோடி பாலமுருகனை தேடி வருகின்றனர். 

காதலை ஏற்க மறுத்த பள்ளி மாணவியை எரித்துக் கொல்ல முயன்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...