கோவை - மத்தியபிரதேசம் இடையிலான அதிவிரைவு சிறப்பு கட்டண ரயில் அறிவிப்பு

போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயணிகளின் வசதிக்காகவும் கோவை - ஜபால்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை : போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயணிகளின் வசதிக்காகவும் கோவை - ஜபால்பூர் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

ரயில் எண் - 02197 கோவை - ஜபால்பூர் (மத்தியபிரதேசம்) வாராந்திர அதிவேக சிறப்புக் கட்டண ரயில் வரும் ஏப்ரல் 09-ம் தேதி முதல் ஜுன் 04-ம் தேதி வரை இயக்கப்படுகிறது. வரும் ஏப்ரல் 09-ம் தேதி (திங்கள்கிழமை) மாலை 07.05 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் இந்த ரயில், புதன்கிழமை காலை 10.20 மணிக்கு சென்றடைகிறது.  

இதேபோல, ரயில் எண் - 02197 கோவை - ஜபால்பூர் (மத்தியபிரதேசம்) வாராந்திர அதிவேக சிறப்புக் கட்டண ரயில் வரும் ஜுன் 11-ம் தேதி முதல் ஜுலை 02-ம் தேதி வரை இயக்கப்படுகிறது. வரும் ஜுன் 011-ம் தேதி (திங்கள்கிழமை) மாலை 07.00 மணிக்கு கோவையில் இருந்து புறப்படும் இந்த ரயில், புதன்கிழமை மதியம் 12.45 மணிக்கு சென்றடைகிறது.  

மேலே குறிப்பிட்ட ரயில்கள் கோவையில் இருந்து திங்கட்கிழமைகளில் மட்டுமே இயக்கப்படுகிறது. இதில், 2 குளிரூட்டப்பட்ட பெட்டிகளும், ஸ்லீப்பர் வசதியுடன் 10 பெட்டிகளும், பொதுப் பிரிவில் 4 மற்றும் பொருட்கள் எடுத்துச் செல்ல 2 பெட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. 

வாராந்திர அதிவேக ரயில்  - ஜபால்பூரில் இருந்து சனிக்கிழமை முதல் 04.11.2017 மற்றும் 30.11.2017 வரை 9 முறை இயக்கப்படும்.

கோவையில் இருந்து திங்கட்கிழமை முதல் 06.11.2017 மற்றும் 01.01.2018 வரை 9 முறை இயக்கப்படும் 

இந்த ரயிலானது, பாலக்காடு, சொர்ணூர், திரூர், கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி, கன்னூர், பயனூர், கன்ஹாங்கட், கஷராஹோடு, மங்களூரு ரயில்நிலையம், முல்கி, உடுப்பி, மூகாம்பிகா சாலை பைந்தூர், குமதா, கர்வார், மட்கோன், திவிம், கூடல், கன்கவளி, ரத்னிகிரி, சிப்லுன், கேட், ரோஹா, பன்வேல், இகத்பூரி, மன்மத், புஷாவல், கந்த்வா, ஹர்தா, இட்டர்சி, பிப்பரியா, கதர்வாரா மற்றும் நரசிங்பூர் ஆகிய ரயில்நிலையங்களில் நிறுத்தப்படும்.

இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு நாளை (பிப்.,17) முதல் தொடங்குகிறது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...