காவிரி நதிநீர் பங்கீடு தீர்ப்பால் இருமாநில எல்லைகளில் அவதிப்பட்ட பயணிகள்

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னதாக, தமிழகம், கர்நாடக எல்லையில் பேருந்துகள் மாறி, மாறி ஏறிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர்.

நீலகிரி : காவிரி நதிநீர் பங்கீடு வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னதாக, தமிழகம், கர்நாடக எல்லையில் பேருந்துகள் மாறி, மாறி ஏறிச் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டதால் பயணிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். 



காவிரி நதிநீர் பங்கீடு வழக்கின் தீர்ப்பு வெளியாவதற்கு முன்னதாக, நீலகிரி மாவட்டத்திலிருந்து கர்நாடகா மாநிலம் செல்லும் அரசு பேருந்துகள் முன்னெச்சரிக்கையாக காலை முதலே எல்லையில் நிறுத்தப்பட்டன. பின்னர், எல்லை வரை இயக்கப்பட்டன. தீர்ப்பு வெளியானதை அடுத்து தமிழக எல்லையான கக்கநல்லா சோதனைச்சாவடியில் கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், கூடலூர் டிஎஸ்பி பி.ரவிசங்கர் தலைமையில் பாதுகாப்பு போடப்பட்டது.



தமிழகத்திலிருந்து கர்நாடக மாநிலம் செல்லும் வாகனங்கள் அனைத்தும் கக்கநல்லா சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டன. கர்நாடகாவிலிருந்து வந்த வாகனங்களும் கக்கநல்லாவில் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து அரசு பேருந்துகளில் வந்த பயணிகள் இறக்கப்பட்டனர். பயணிகள் பேருந்துகளிலிருந்து இறங்கி நடந்து வந்து சோதனைச்சாவடியை கடந்து தமிழக எல்லையில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்தகளில் ஏறி உதகை பயணித்தனர். ஆனால், சுற்றுலா வாகனங்கள் இரு மாநிலத்துக்குள்ளும் நுழைய போலீஸார் அனுமதிக்காததால், சுற்றுலாப் பயணிகள் செய்வதறியாது எல்லையில் தவித்தனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...