சாலைகளை சீரமைக்கக்கோரி சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க., எம்.எல்.ஏ., கைது

கோவையில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்கக்கோரி இன்று சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க., எம்.எல்.ஏ., நா.கார்த்திக்-ஐ போலீசார் கைது செய்தனர்.

கோவை: கோவையில் பழுதடைந்துள்ள சாலைகளை சீரமைக்கக்கோரி இன்று சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க., எம்.எல்.ஏ., நா.கார்த்திக்-ஐ போலீசார் கைது செய்தனர்.

கோவை மாநகராட்சி பகுதிகளில் பழுதடைந்துள்ள சாலைகளை புதிய தார் சாலையாக மாற்றக் கோரி பீளமேடு அவினாசி பகுதியில் எம்.எல்.ஏ., நா.கார்த்திக் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் கடந்த ஓராண்டு காலத்திற்கும் மேலாக சாலைகள் பழுதடைந்துள்ளது. வாகனங்களிலும், நடந்தும் செல்லமுடியாத அளவிற்கு சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறது. சாலைகளை செப்பனிட்டு புதிய தார் சாலைகளாக அமைக்க வலியுறுத்தி கோவை மாநகராட்சி ஆணையாளர் மற்றும் மாநகராட்சி பொறியாளர்களிடமும் பலமுறை நேரிலும் , கடிதம் மூலமாகவும் எடுத்துச் சொல்லியும் இன்னும் சரிசெய்யப்படவில்லை. ஆகவே மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் , உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும் இல்லாவிட்டால் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம்" என்றார். 

இந்த சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., உட்பட 100 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...