மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட உதவிகள் தாழ்த்தப்பட்ட மக்களை சென்றடைகிறதா..?

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை சென்றடைகிறதா எனத் தேசிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் நல ஆணையம் கண்காணித்து வருவதாக ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் தெரிவித்தார்.

திருப்பூர்: மத்திய, மாநில அரசுகளின் மக்கள் நலத்திட்டங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை சென்றடைகிறதா எனத் தேசிய தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மக்கள் நல ஆணையம் கண்காணித்து வருவதாக ஆணையத்தின் துணைத்தலைவர் முருகன் தெரிவித்தார். 



 

மங்களம் சாலையில் உள்ள கே.வி.ஆர் நகர் பகுதியில் உள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதியில் மனு வாங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. இதில், தேசிய தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள்நல ஆணையத்தின் தேசிய துணைத்தலைவர் முருகன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ். பழனிச்சாமி ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனு பெற்றனர். 



பின்னர் செய்தியாளர்களிடம் துணைத்தலைவர் முருகன் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் தாழ்த்தப்பட்ட மக்களுக்காக அறிவித்து வழங்கியுள்ள நலத்திட்டங்கள் சரியான முறையில் அவர்களை சென்றடைகிறதா என தேசிய தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்கள் ஆணையம் கண்காணித்து வருகிறது. நேற்றைய தினம் காஞ்சிபுரம் பகுதியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த மக்களுக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப் பரிந்துரை செய்துள்ளது. மேலும், இறந்தவர்களில் இரண்டுபேர் தாழ்த்தப்பட்ட மக்கள் என்பதால் அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...