ரயில்வேத்துறையில் டிரேக்மேனுக்கு அதிநவீன உபகரணங்கள் வழங்க முடிவு

ரயில் தண்டவாளங்களை ஆய்வு செய்யும் டிரேக்மேனுக்கு, ரயில் வருவதை முன்கூட்டிய அறியும் விதமாக, அதிநவீன உபகரணங்களை வழங்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது.

ரயில் தண்டவாளங்களை ஆய்வு செய்யும் டிரேக்மேனுக்கு, ரயில் வருவதை முன்கூட்டிய அறியும் விதமாக, அதிநவீன உபகரணங்களை வழங்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது. 

நாடு முழுவதும் ரயில்துறை மேம்பாட்டிற்காக மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக, பட்ஜெட்டிலும் நிதி ஒதுக்கப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ரயில்வே துறை சார்ந்த அதிகாரிகளின் கூட்டம் கடந்த வாரம் நடைபெற்றது. அதில், ரயில் தண்டவாளங்களை ஆய்வு செய்யும் டிரேக்மேன், ரயில் வருவதை அறிய முடியாமல் படும் இன்னல்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முடிவில்,  டிரேக்மேன்களுக்கு ரயில் வருவதை முன்கூட்டிய அறியும் விதமாக, அதிநவீன உபகரணங்களை வழங்க ரயில்வேத்துறை முடிவு செய்துள்ளது. 

அதாவது, ரக்ஷாக் எனப்படும் வாக்கி - டாக்கிகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், அதிர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எல்.இ.டி.யின் மூலம் தகவலின் பேரில், தண்டவாளத்தில் இருந்து டிரேக்மேன்கள் விலகிச் செல்ல முடியும். மேலும், பிரத்யேக காலணிகள், கையுறைகள், ரெயின் கோட் (rain coat), குளிர் ஜாக்கெட் மற்றும் பல உபகரணங்களை வழங்க ரயில்வே நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

இந்த ரக்ஷாக் கருவியானது தெற்கு மத்திய ரயில்வேயில் அறிமுகப்படுத்தப்பட்டு, நடைமுறையில் உள்ளது. 

இதனிடையே, 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் பேரில் ஆடை பராமரிப்புகளுக்காக டிரேக்மேனுக்கு ஆண்டுதோறும் ரூ. 5 ஆயிரம் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...