திருப்பூர் : திருமணம் செய்து கொண்டு வங்கதேசத்தில் வசிக்கும் தனது மகளை மீட்டுத் தருமாறு அந்த பெண்ணின் பெற்றோர் திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
திருப்பூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் உலகநாதன் இவரது மனைவி செல்வ கோமதி. இவர்களுக்கு பூா்ணா தேவி (19) என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் ரிமுஷேக் என்ற வாலிபரை திருமணம் செய்து கொண்டு வங்கதேசம் சென்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மகள் தங்களிடம் பேசுவதில்லை என்று கூறியும், அவரை மீட்டுத்தர் வேண்டியும் உலகநாதன்-செல்வ கோமதி தம்பதியினர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
அதில், " எங்கள் மகளான பூா்ணாதேவி கடந்த 2016-ம் ஆண்டு ரிமுஷேக் என்கிற இஸ்லாமியருடன் காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டு வங்கதேசத்தில் வசித்து வந்தனர். திருமணம் முடிந்த பின்னும் வாரந்தோறும் பூா்ணாதேவி எங்களுடன் பேசி வந்தார். இந்த நிலையில், கடந்த எங்களைத் தொடர்பு கொண்ட ரிமுஷேக் பூா்ணாதேவி உடல்நிலை சரியில்லாத காரணமாக இறந்து விட்டதாக கூறினார். இந்நிலையில், ரிமுஷேக்கை பற்றி விசாரித்தபோது லவ்ஜிகாத் அமைப்பைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. எனது மகளை தவறான நோக்கத்துடன் கடத்தி சென்று தீவிரவாத செயலுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எங்கள் மகளின் தற்போதைய நிலையை அறிந்து, எங்களிடம் மீட்டுத் தர வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.