மகளை மீட்டுத் தாருங்கள்..! : பெற்றோர் கண்ணீர் புகார்


திருப்பூர் : திருமணம் செய்து கொண்டு வங்கதேசத்தில் வசிக்கும் தனது மகளை மீட்டுத் தருமாறு அந்த பெண்ணின் பெற்றோர் திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 

திருப்பூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் உலகநாதன் இவரது மனைவி செல்வ கோமதி. இவர்களுக்கு பூா்ணா தேவி (19) என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் ரிமுஷேக் என்ற வாலிபரை திருமணம் செய்து கொண்டு வங்கதேசம் சென்றதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், மகள் தங்களிடம் பேசுவதில்லை என்று கூறியும், அவரை மீட்டுத்தர் வேண்டியும் உலகநாதன்-செல்வ கோமதி தம்பதியினர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். 

அதில், " எங்கள் மகளான பூா்ணாதேவி கடந்த 2016-ம் ஆண்டு ரிமுஷேக் என்கிற இஸ்லாமியருடன் காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டு வங்கதேசத்தில் வசித்து வந்தனர்.  திருமணம்  முடிந்த பின்னும் வாரந்தோறும் பூா்ணாதேவி எங்களுடன் பேசி வந்தார். இந்த நிலையில், கடந்த எங்களைத் தொடர்பு கொண்ட ரிமுஷேக் பூா்ணாதேவி உடல்நிலை சரியில்லாத காரணமாக இறந்து விட்டதாக கூறினார். இந்நிலையில், ரிமுஷேக்கை பற்றி விசாரித்தபோது லவ்ஜிகாத் அமைப்பைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. எனது மகளை தவறான நோக்கத்துடன் கடத்தி சென்று தீவிரவாத செயலுக்காக  பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எங்கள் மகளின் தற்போதைய நிலையை அறிந்து, எங்களிடம் மீட்டுத் தர வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...