கோவையில் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளை

குனியமுத்தூர் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இருந்த வீடுகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 19 சவரன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: குனியமுத்தூர் பகுதியில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இருந்த வீடுகளுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 19 சவரன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



குனியமுத்தூர் கஸ்தூரி காடர்ன் பகுதியைச் சேர்ந்தவர் சேக் அப்துல்லா (37). இன்று அதிகாலை இவர் வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த போது வீட்டிற்குள் திடீரென அரை நிர்வாணத்தில் புகுந்த மூன்று மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். 

மேலும், அப்துல்லாவின் மனைவி அணிந்திருந்த நகை, பீரோவில் வைத்திருந்த 17 சவரன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். அதே போல் அருகே உள்ள பாஷா (46) என்பவரது வீட்டிற்குள் புகுந்த மூன்று பேர் அவரது சகோதரி அணிந்திருந்த 2 சவரன் நகையையும் மிரட்டிப் பறித்து தப்பிச் சென்றனர். 



இது தொடர்பாக, தகவலறிந்த மாநகர காவல்துறை துணை ஆணையர் லட்சுமி மற்றும் உதவி ஆணையர் ரமேஷ் கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தியதோடு, கொள்ளையர்கள் விட்டுச் சென்ற இரு சக்கர வாகனம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் கொள்ளையர்கள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி கொள்ளையடித்த சம்பவம் கோவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதே பகுதியில் தான் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...