எடப்பாடி அரசு விரைவில் வீட்டிற்குச் செல்லும் - ஜவாஹிருல்லா

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளை கண்டு கொள்ளாத எடப்பாடி அரசு விரைவில் வீட்டிற்கு செல்லும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளை கண்டு கொள்ளாத எடப்பாடி அரசு விரைவில் வீட்டிற்கு செல்லும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார். 



இது தொடர்பாக உதகையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், " தமிழகத்தில் பயங்கரவாதிகளின் நடவடிக்கை அதிகரித்து வருவதாகவும் தமிழ் உணர்வாளர்கள் மற்றும் முஸ்லீம்கள் சட்ட ஒழுங்குக்கு பிரச்சினை ஏற்படுத்தி வருவதாகவும் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இது மத்திய இணை அமைச்சருக்கு சரியான நிலைப்பாடு இல்லை. தமிழகத்தில் கொள்வதற்காக மக்களிடையே பிளவை ஏற்படுத்தி அதில் அரசியல் லாபம் பெறலாம் என்பது தான் பா.ஜ.க வின் திட்டம். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை உள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்டது தமிழகத்தில் உயர்கல்வித் துறை லஞ்சமயமாகி வருவதை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தில் பல்வேறு பல்கலைக்கழக துணைவேந்தர்களின் நியமனம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் விசாரிக்க வேண்டும்.

தமிழகத்தில் பேருந்து கட்டண உயர்வு, நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு மக்கள் பிரச்சினைகளை கண்டு கொள்ளாத எடப்பாடி அரசு விரைவில் வீட்டிற்கு செல்லும். ஜன நாயக முறைப்படி தேர்தல் நடைபெற்று மக்கள் விரும்பும் அரசு அமையும்.

நடிகர் கமலஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் திரைப்படங்களில் சிறந்த நடிகர்கள் அதே போல அரசியல் களத்திலும் நல்ல நடிகர்கள் என்று தான் பார்க்கிறேன். தமிழகத்தில் ஏராளமான பிரச்சினைகள் இருந்த போதெல்லாம் இவர்கள் மவுனம் சாதித்தனர். தற்போது இவர்கள் அரசியல் பக்கம் திரும்புவது ய நலத்திற்காகத் தான். மற்ற கட்சிகளை குறித்து விமர்சிப்பதற்கு கமலஹாசன் எந்த ஒரு தகுதியும் இல்லை." என்று அவர் கூறினார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...