கல்லூரி மாணவர் தற்கொலை : உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

கோவையில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

கோவை: கோவையில் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறிய உறவினர்கள் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

மலுமச்சம்பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆட்டோ மொபைல் இரண்டாமாண்டு பயின்று வந்தவர் பிரேம்குமார். சூளகிரி பகுதியை சேர்ந்த இவர் நேற்று கல்லூரி விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் , மாணவனின் மரணத்தில் மர்மம் இருப்பதாக செட்டிபாளையம் காவல்நிலையத்தில் அவரது தந்தை விஸ்வநாதன் புகார் அளித்தார்.

இது குறித்து மாணவர் குறித்து அவரது மாமா ரமேஷ் கூறுகையில், " பிரேம்குமார் இதுவரை எந்த பிரச்சனை குறித்தும் வீட்டிற்கு தெரியப்படுத்தியதில்லை. அவர் நன்றாகப் படிக்கும் மாணவர். கல்லூரி வீடு என்று சுற்றுவட்டாரங்களில் நற்பெயரை கொண்டவர். 

கல்லூரி நிர்வாகம் பிரேமின் மரணம் தொடர்பாக முன்னுக்குப் பின் முரணாக பதில் தருகிறது. அந்த கல்லூரி வளாகத்தில் கண்காணிப்பு காமிரா இல்லை" என்றார்.

இந்த நிலையில் மாணவரின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். தொடர்ந்து அவர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மாணவனின் உடலை பெற்றுச் சென்றனர்.

இது தொடர்பாக செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...