பி.எஸ்.ஜி. கல்லூரியில் வீதி நாடகம் நடத்திய பரம்பரை தெருக்கூத்து மன்றம்

பரம்பரை தெருக்கூத்து மன்றத்தினர் சார்பில் பி.எஸ்.ஜி. கலை கல்லூரியில் நேற்று வீதி நாடகம் நடைபெற்றது.

கோவை: பரம்பரை தெருக்கூத்து மன்றத்தினர் சார்பில் பி.எஸ்.ஜி. கலை கல்லூரியில் நேற்று வீதி நாடகம் நடைபெற்றது.

'அடவு' என்ற தலைப்பில் தெருக்கூத்து அழிந்து வருவது தொடர்பாக நேற்று வீதி நாடகம் ஒன்று நடத்தப்பட்டது. பி.எஸ்.ஜி. கலைக் கல்லூரியில் நடைபெற்ற இந்த நாடகத்தை "பரம்பரை தெருக்கூத்து மன்றம்" என்ற அமைப்பை சேர்ந்த கலவை குமாரசாமி தலைமையில் நடைத்தினார். 'திரவுபதி வஸ்திரபானம் தெருக்கூத்து' என்ற பெயரில் 'அடவு' என்ற தலைப்பில் இந்த நாடகத்தை வெற்றி என்பவர் இயக்கினார்



மகாபாரதத்தின் திரவுபதி என்ற கதா பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்த இந்த கதைக் களத்தில் இன்றைய கால கட்டத்தில் தெருக் கூத்து அழிந்து வருவதை சுட்டிக்காட்டி கலைஞர்கள் நடித்துக்காட்டினர்.



பி.எஸ்.ஜி. கலை கல்லூரியின் நிலா முற்றம் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் இந்த வீதி நாடகத்தை கண்டுகளித்தனர்.

இதன் அடுத்த காட்சி கோவை சாயிபாபா காலனி பகுதியில் உள்ள 641 கஃபே-யின் இன்று மாலை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...