மருந்துக்கடை உரிமையாளரைக் கடத்திய வாலிபர்கள் கைது

ஆர்.எஸ்.புரம் பகுதியில் மருந்துக்கடை உரிமையாளரை கடத்திய வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


கோவை: ஆர்.எஸ்.புரம் பகுதியில் மருந்துக்கடை உரிமையாளரை கடத்திய வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவையைச் சேர்ந்தவர் தன்ராஜ். மருந்துக்கடை நடத்தி வரும் இவரை 7-ம் தேதி ஆர்.எஸ்.புரம் பழமுதிர் சோலை அருகில் மர்ம நபர்கள் கடத்தி சென்றனர். தொடர்ந்து அன்று இரவே அவர் விடுவிக்கப்பட்டார்.

அஸ்வின் என்ற நபரிடம் ரூ.22 லட்சம் கடனாக வாங்கிய தன்ராஜ் கடனை திருப்பிக் கொடுப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே கடத்தி துன்புறுத்தப்பட்டதாகப் போலீசில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக தனிப்படை அமைத்த போலீசார் தன்ராஜை கடத்தி துன்புறுத்தியதாக அக்னேஷ் (30), கார்த்திக் கண்ணன் ஆகியோரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மேலும் நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...