தனியார் பேருந்து நடந்துனரின் உரிமம் தற்காலிகமாக ரத்து..!

மேட்டுப்பாளையத்தில் பயணி ஒருவரிடம் முறைகேடாக நடந்து கொண்ட தனியார் பேருந்து நடத்துனரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார்.



கோவை: மேட்டுப்பாளையத்தில் பயணி ஒருவரிடம் முறைகேடாக நடந்து கொண்ட தனியார் பேருந்து நடத்துனரின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மேட்டுப்பாளையம் வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டார்.

கோவை முதல் மேட்டுப்பாளையம் வரை செல்லும் தனியார் பேருந்து ஓட்டுநர் சரவணக்குமார் மற்றும் நடத்துநர் சேக்பரீத் மீது பயணி ஜெயக்குமார் கொடுத்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் கடந்த பிப்ரவரி 5-ம் தேதி வழக்கு பதிவு செய்தனர். 

இந்த புகார் மேட்டுப்பாளையம் வட்டாரா போக்குவரத்து அலுவலரிடமும் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், நடத்துநர் சேக்பரீத் மீது கொடுக்கப்பட்ட புகார் உண்மை என உறுதி செய்தார்.

இதனிடையே மோட்டார் வாகன சட்டம்( 34) பிரிவு 1- ன் படி நடந்துநர் சேக்பரீதின் நடந்துநர் உரிமம் தற்காலிகமாக ஒரு மாத காலத்திற்க்கு (12-2-2018)முதல் (13-3-2018) வரை ரத்து செய்யப்படுவதாக வட்டாரா போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த சனிக்கிழமை (3.2.2018 ) மதியம் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வரும் பேராசிரியர் எம். ஜெயக்குமார் (SB_டிரான்ஸ்போர்ட் TN 66 F 5271) பயணம் செய்தபோது டிக்கெட் வாங்கியது போக மீத தொகை 25 ரூபாயை மூன்று முறை கேட்டும் தராமல் இழுத்தடித்ததோடு, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் சென்றடையும் வரை தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...