மலேசியாவில் நடந்த யோகா போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த கோவை மாணவி

கடந்த மாதம் மலேசியாவில் நடைபெற்ற 6-வது சர்வதேச யோகா போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட கோவையைச் சேர்ந்த மாணவி வைஷ்ணவி தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.

கோவை : கடந்த மாதம் மலேசியாவில் நடைபெற்ற 6-வது சர்வதேச யோகா போட்டியில் இந்தியா சார்பாக கலந்துகொண்ட கோவையைச் சேர்ந்த மாணவி வைஷ்ணவி தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.



ஜனவரி மாதம் நடைபெற்ற இப்போட்டியில் ஆசியா கண்டத்தை சேர்ந்த இந்திய, மலேசியா, சிங்கப்பூர், இண்டொனேசியா, ஹாங்காங், ரசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளை சார்ந்த 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டுள்ளனர். அதில் 15 வயதுக்குட்பட்ட பிரிவில் 

கோவை அடுத்த சோமனூர் பகுதியை சார்ந்த தனியார் பள்ளி மாணவி வைஷ்ணவி (14), கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.

இதேபோன்று 2015 மற்றும் 2016-ம் ஆண்டு சர்வதேச அளவில் தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற யோகா போட்டிகளில் கலந்துகொண்டு சாம்பியன் ஆப் யோகா, ஒவர் ஆல் கோல்டு போன்ற பதங்கங்களையும் வென்றுள்ளார். அதேபோல, மாவட்டம், மாநிலம், தேசிய அளவில் நடைபெற்ற போட்டிகளில் வென்று பலநூறு பதக்கங்களை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



இது குறித்து வைஷ்ணவி கூறுகையில், "9 வயது முதல் யோகா செய்து வருகிறேன். பள்ளிக்கூடத்தில் விளையாட்டு பிரிவில் யோகா பயில ஆரம்பித்தேன். பின்னர், அது பிடித்துப்போய் முழுவதுமாக யோகா போட்டிகளில் மாவட்டம், மாநிலம், தேசம், சர்வேதேசம் என கலந்துகொள்ள ஆரம்பித்தேன். படிப்பு மட்டுமே வாழ்க்கை இல்லை. ஒவ்வொரு மாணவரின் தனிதிறமையும் ஊக்குவிக்கப்பட்டு, அதற்கான முயற்சிகளை எடுத்தால் அனைவரும் வெற்றியடைய முடியும். எனது இந்த முயற்சிக்கு என் பெற்றோர் மற்றும் பள்ளி நீர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்கிறது, " என்றார்.

தனியார் வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வரும் வைஷ்ணவியின் தந்தை சரவணக்குமார் கூறுகையில், "திறமைசாலிகள் மதிக்கப்பட வேண்டும்.படித்தால் வாழ்க்கையில் முன்னரே மட்டும்தான் முடியும். ஆனால் திறமைகளை வெளிப்படுத்தி அதில் வெற்றியடைந்தால் மட்டுமே இந்த உலகம் நம்மலை திரும்பி பார்க்கும். திறமை உள்ள மாணவர்களை அவர்களது பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்,"என்றார்.

வைஷ்ணவி சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கேற்க அவரது பள்ளியான பார்க் குளோபல் மிகவும் உறுதுனையாக உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...