"முதலமைச்சர் பழனிசாமி ஆட்சியில் தமிழகத்திற்கு அனைத்துத் துறைகளிலும் பின்னடைவு''

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒராண்டு ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கி விட்டதாக தே.மு.தி.க., பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.


கோவை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஒராண்டு ஆட்சியில் தமிழகம் அனைத்துத் துறைகளிலும் பின்தங்கி விட்டதாக தே.மு.தி.க., பொதுச்செயலாளர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எடப்பாடி பழனிசாமியின் ஒராண்டு ஆட்சியில் தமிழகம் அனைத்து துறைகளிலும் பின்தங்கிவிட்டது. தமிழகம் ரூ. 5 லட்சம் கோடி கடன் உள்ளது. எடப்பாடி பழனிசாமி ஆட்சி மீது மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இந்த ஒராண்டு ஆட்சி குறித்து சொல்ல ஒன்றும் இல்லை. கடந்த தேர்தலில் விஜயகாந்த்தை முதலமைச்சராக்குவோம் எனக் கூறிய வைகோ, தற்போது ஸ்டாலினை முதலமைச்சராக்குவதே தனது நோக்கம் எனக்கூறியிருப்பது தொடர்பாக நீங்கள் வைகோவிடம் தான் கேட்க வேண்டும். இவ்வாறு கூறினார்.

மேலும், தமிழகம் பெரியார் மண்ணல்ல, பெரியாழ்வார் மண் என பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை கூறியிருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், ஒவ்வொருவர் கருத்திற்கும் பதில் சொல்ல முடியாது என்றும், மதத்தால் யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்பதே தே.மு.தி.க.,வின் நிலைப்பாடு என்றார். ஆட்சியாளர்கள் ஊழல் செய்து சுமையை மக்கள் மீது திணிப்பதாகவும், இதனால் நாடும், மக்களும் கடனில் உள்ளதாக அவர் கூறினார். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...