உதகை சேரிங்கிராஸ் பகுதியில் பராமரிப்பின்றி கிடந்த கழிப்பறை கலைக் கூடமாக மாறி வருகிறது.
நீலகிரி : உதகை சேரிங்கிராஸ் பகுதியில் பராமரிப்பின்றி கிடந்த கழிப்பறை கலைக் கூடமாக மாறி வருகிறது.

நீலகிரியின் இயறக்கையை பேணிக் காக்க, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பிளாஸ்டிக் ஒழிப்பு உட்பட்ட நடவடிக்கைகளில் தன்னார்வு அமைப்புகளின் ஒத்துழைப்பு வழங்கி வரும் மாவட்ட நிர்வாகம் தற்போது அதன் தொடர்ச்சியாக உதகையின் நுழைவாயில் பகுதியான சேரிங்கிராஸ் பகுதியில் பயனற்ற நிலையில் கிடந்த கழிவறையைத் தன்னார்வலர்கள் உதவியுடன் கலைக்கூடமாக மாற்ற முடிவு செய்துள்ளது.
அதன்படி, உதகையின் நுழைவு வாயில் என்றழைக்கப்படும் சேரிங்கிராஸ் பகுதியில் பயனற்ற நிலையில் இருந்த கழிவறை சமூக ஆர்வலரான ஷோபா சந்திரசேகர் முயற்சியில் தற்போது கலைக்கூடமாக மாறி வருகிறது. விரைவில் இதன் திறப்பு விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது