சுற்றுலா பயணிகளால் கண்டுகொள்ளப்படாத உதகை மரவியல் பூங்கா

பராமரிக்கப்பட்ட உதகை மரவியல் பூங்கா தொடர்பாக முறையான விழிப்புணர்வு இல்லாததால், அதனை சுற்றுலா பயணிகள் கண்டுகொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது.

உதகை : பராமரிக்கப்பட்ட உதகை மரவியல் பூங்கா தொடர்பாக முறையான விழிப்புணர்வு இல்லாததால், அதனை சுற்றுலா பயணிகள் கண்டுகொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது.



சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகையில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. குறிப்பாக, அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் மலர்களைக் காணவே அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு மாறுதல் ஏற்படுத்தும் வகையில், படகு இல்ல மறுகரையில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் கடந்த 1982-ம் ஆண்டு பல்வேறு வகையான குளிர்பிரதேசங்களில் இருந்து 60 வகையான அரிய மரக்கன்றுகளை நடவு செய்யப்பட்டது. காலப்போக்கில் போதிய வேலிகள் இல்லாததால் பராமரிக்கப்படாமல் இருந்தது.



இதனையடுத்து, மீண்டும் இப்பூங்காவை பொலிவுபடுத்தும் வகையில், கடந்த 2007-ம் ஆண்டு சிறப்பு மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் சுமார் 14 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பூங்கா அழகான, அமைதியான, சுற்றுச்சூழல் சிறிதும் மாசுபடாமல் இருந்து வருகிறது. எனவே, உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு தெரியப்படுத்தும் வகையில் விளம்பரங்களைச் செய்தால் இப்பூங்காவின் அழகு அனைவராலும் ஆதரிக்கப்படும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...