காதலர் தினம் கொண்டாடிய சமூக நீதிக் கட்சியினர்

கோவையில் இன்று கேக் வெட்டியும், பலூன்களை பறக்கவிட்டும் சமூக நீதிக்கட்சியினர் காதலர் தினத்தை கொண்டாடினர்.

கோவை: கோவையில் இன்று கேக் வெட்டியும், பலூன்களை பறக்கவிட்டும் சமூக நீதிக்கட்சியினர் காதலர் தினத்தை கொண்டாடினர்.



உலகம் முழுவதும் இன்று காதலர் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமூக நீதிக்கட்சியினர் கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கேக் வெட்டியும், பலூன்களை பறக்க விட்டும் காதலர் தினத்தைக் கொண்டாடி மகிழ்ந்தனர். 



மேலும், சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழக அரசு தனிச்சட்டம் இயற்றக்கோரி, ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். சாதி, மதங்களை ஒழிக்கும் கருவி காதல் என்றும், காதலும், வீரமும் தமிழர்களின் பண்பாடு என்றும் கூறிய அவர்கள், சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு சாதி அற்றோர் என தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...