ரேஷன் கடையிலேயே பிளாஸ்டிக் அரிசி..! : அலறும் மக்கள்

திருப்பூரில் உள்ள நியாய விலைக் கடை ஒன்றில் பிளாஸ்டிக் அரசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அதிகாரி இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

திருப்பூர்: திருப்பூரில் உள்ள நியாய விலைக் கடை ஒன்றில் பிளாஸ்டிக் அரசி விற்பனை செய்யப்படுவதாக எழுந்த புகாரை அடுத்து உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அதிகாரி இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார். 

திருப்பூர் 48-வது வார்டு சூசையாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயமேரி. இவர் தனது மகன் ராஜாவுடன் வசித்து வருகிறார். 



மாற்றுத்திறனாளியான ராஜா அதேபகுதியில் இரு சக்கர வாகனம் பழுது பார்க்கும் பணிசெய்து வருகிறார். இந்நிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் ரூ.1,220 மதிப்புள்ள  25 கிலோ பொன்னி புழுங்கல் அரிசி மூட்டை இரண்டு வாங்கியுள்ளனர்.



இதனிடையே நியாய விலைக் கடையில் வாங்கிய அரிசியை சமைப்பதற்கு தண்ணீரில் போட்டு வேக வைத்த போது கால்பங்கு அரிசியானது தண்ணீரில் மிதந்துள்ளது. இருப்பினும் அரிசியை வேக வைத்து பார்த்த போது பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்திருப்பது தெரிய வந்தது.

தொடர்ந்து, அரிசியை உருண்டை செய்து , தீயில் காட்டியுள்ளார். அப்போது அரிசி உருண்டை தீப்பற்றி எரிந்ததாக கூறப்படுகிறது. அதே போல் அரிசியை உருட்டி சுவற்றில் அடித்த போது உடையாமல் கல் போல் இருந்ததைக் கண்ட ஜெயமேரி இது குறித்து நியாய விலை கடையில் பணியாற்றும் ஊழியரிடம்  கேட்டுள்ளார், அதற்கு, "இது தரமான அரிசி என்றும், வாங்கிச் சென்ற அரிசியை மாற்ற முடியாது" என்றும் கடை ஊழியர்கள் கூறியுள்ளனர். 



இது தொடர்பான புகாரின் பேரில் உணவு மற்றும் மருந்து பாதுகாப்பு அதிகாரி முருகேஷ் இன்று அந்த நியாய விலைக் கடையில் ஆய்வு நடத்தியுள்ளார். 

நியாய விலைக் கடைகளிலேயே பிளாஸ்டிக் அரசி விற்பனைக்கு வருவது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். 

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...