வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள், நற்பணி இயக்கத்தினருடன் கமலஹாசன் ஆலோசனை

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் நற்பணி இயக்கத்தினருடன் நடிகர் கமலஹாசன் இன்று ஆலோசனை நடத்தினார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் நற்பணி இயக்கத்தினருடன் நடிகர் கமலஹாசன் இன்று ஆலோசனை நடத்தினார். 

நடிகர் கமலஹாசன் வருகிற 21-ம் தேதி ராமேஸ்வரத்தில் உள்ள குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் வீட்டுக்கு சென்று அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து விட்டு அரசியல் பயணத்தை தொடங்குகிறார். அன்று மாலை மதுரையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், தமிழகம் முழுவதிலும் இருந்து ரசிகர்கள் திரள்கிறார்கள். கொடி தோரணங்கள், சுவரொட்டிகள் என்று நகரையே விழாக்கோலமாக அமர்க்களப்படுத்துகின்றனர். அந்தக்கூட்டத்தில் கமலஹாசன் கட்சி பெயரை அறிவித்து கொள்கை மற்றும் திட்டங்களை வெளியிடுகிறார்.

கட்சியின் தலைவராக கமலஹாசன் நியமிக்கப்படுகிறார். பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். ராமநாதபுரம், மதுரை, சிவகங்கையில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். ஏற்கனவே கட்சி பெயர் தேர்வு செய்யப்பட்டு ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது. கட்சி பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதற்கு தேவையான பிரமாண பத்திரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி தயார் செய்துள்ளனர். கட்சி பெயரை பதிவு செய்யும் தேதி குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என தெரிகிறது.

இந்நிலையில், நடிகர் கமலஹாசன் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வழக்கறிஞர் சங்கம் மற்றும் நற்பணி இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். அரசியல் பயணம், பயண திட்டங்கள் மற்றும் கட்சி பெயர் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. 

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...