சிறுமி ஹாசினி கொலை வழக்கில் வரும் 19-ம் தேதி தீர்ப்பு

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் வரும் 19-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் வரும் 19-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

சென்னை போரூரை அடுத்த மவுலிவாக்கம் மாதா நகரைச் சேர்ந்த பாபு, ஸ்ரீதேவி தம்பதியின் மகள் சிறுமி ஹாசினி. இவரை, பக்கத்து வீட்டுக்காரரான தஷ்வந்த் பாலியல் பலாத்காரம் செய்து, எரித்துக் கொன்றார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தஞ்வந்த்தை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். 

பின்னர், ஜாமினில் வெளியே வந்த அவர், பணத்துக்காகப் பெற்ற தாயையும் கொலை செய்துவிட்டு மும்பைக்கு தப்பினார். ஆனால், போலீஸழர் அவரை, மும்பை போலீஸாரின் உதவியுடன் மும்பையின் அந்தேரி பகுதியில் மறைந்திருந்த தஷ்வந்த்தை போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர். 

இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. பலகட்ட விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் விவேகானந்தன் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்து, நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். 

இதையடுத்து, விசாரணை முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு வரும் 19-ம் தேதி வழங்கப்படும் என செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...